ஆகஸ்டு 16 ம் தேதிக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு indane gas e kyc online
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு
ஆகஸ்டு 16 ம் தேதிக்குள் அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களும் கட்டாயம் eKYC செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ eKYC செய்யலாம்.
eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம்கள் நடக்கும் என எல்பிஜி எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்
உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே உங்கள் LPG e-KYC-ஐ ஆன்லைனில் இலவசமாகப் பூர்த்தி செய்யலாம்.
பாரத் கேஸ் கஸ்டமர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் "Hello BPCL" செயலி மற்றும் ஆதார் அமைப்பின் "AadhaarFaceRD'" செயலியை டவுன்லோடு செய்து, வீட்டிலிருந்தபடியே முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் நொடிகளில் இ-கேஒய்சி செய்து கொள்ள முடியும்.
ஆன்லைன் வசதிகள்ஆன்லைன் வசதி இல்லாத பொதுமக்கள், தங்களது அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகவே சென்று, அங்கிருக்கும் பயோமெட்ரிக் கருவி வாயிலாக விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்து தங்களது இணைப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
சமையல் எரிவாயு கணக்கில் எல்பிஜி நுகர்வோர் எண், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவை சரியாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத் தொகை தடையின்றி கிடைக்கும்.
அதனால் கடைசி நேர நெரிசலையும், மானியம் நிறுத்தப்படுவதையும் தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 16ம் தேதிக்குள் இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
eKYC செய்ய வேண்டிய முறைகள்
நேரில் செய்யும் முறை:
உங்கள் எரிவாயு விநியோகஸ்தரை (Gas Distributor/Showroom) நேரில் அணுகி பயோமெட்ரிக் முறையில் eKYC செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் முறை:
தொடர்புடைய எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மற்றும் Aadhaar FaceRD செயலியைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே முகத்தை ஸ்கேன் செய்து ஆன்லைனில் முடிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.pmuy.gov.in/e-kyc.html
Tags: தமிழக செய்திகள்
