Breaking News

Unlock 3.0- இவைக்கெல்லாம் தடை, இவைக்கெல்லாம் அனுமதி.. முழுவிபரம் இதோ

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் உள்ளது. 

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 3.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இவைக்கெல்லம் அனுமதி:

யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் திறக்க அனுமதி.

சுதந்திர தினக் கொண்டாட்டம், தனிமனித இடைவெளியுடன் நடைபெற அனுமதி.

உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்.

இரவு நேர லாக்டவுன் மொத்தமாக நீக்கப்படுகிறது.



இவைக்கெல்லாம் தடை:

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை செயல்படாது.

மதுபானக் கூடங்கள், 

மெட்ரோ ரயில், 

திரையரங்குகள்

திருவிழாக்கள், 

அரசியல் கூட்டங்கள், 

விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை.

65 வயதுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே செல்ல தடை நீட்டிப்பு.




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback