Breaking News

மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு

அட்மின் மீடியா
0
இந்தியாவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு.இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. 


தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் மத வாழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் வரும் 8 ஆம் தேதி முதல் மாநில அரசுகள் அங்குள்ள நிலையைப் பொறுத்து வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மத வழிபாட்டுதலங்களை திறக்க இன்னும் அனுமதி வழ்ங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது


அவ்வாறு மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


வழிபாட்டு தலங்களின் நுழைவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும், 

வரும் மக்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம் ஆகும்

வழிபாட்டு தலங்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் 

கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள், சுவரொட்டிகளை வழிபாட்டுதலங்களில் வைக்க வேண்டும். 

வழிபாட்டு தலங்களில் சமூகவிலகலைக் கடைபிடித்து வரிசையில் நிற்க வேண்டும், அமர வேண்டும். அதற்கான அடையாளம் சமூக விலகலைக் கடைபிடித்து இட வேண்டும்

வழிபாட்டுத் தலத்துக்குள் நுழையும்போது வரிசையில் நின்றால் 6 அடி இடைவெளிவி்ட்டு நிற்க வேண்டும்

சமூக இடைவெளிவிட்டு இருக்கைகளை வழிபாட்டு தலத்தில் அமைக்க வேண்டும்

புனித நூல்களைத் தொடுதல், சிலைகளைத் தொடுதல் அனுமதிக்கக் கூடாது

கூட்டமாகக் கூடுதல், கூட்டம் நின்று வழிபாடு செய்தல் தடை செய்யப்படுகிறது

பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பலாம் ஆனால் குழுவாக பக்தி பாடல்களை பாடுவது அனுமதிக்கப்படாது

வழிபாட்டு தலத்தில் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறுதல் கூடாது

வழிபாட்டுத் தலத்தில் பொதுவான தரைவிரிப்புகளில் நின்று வழிபாடு செய்வதற்கு பதிலாக அனைவரும் தனித்தனியாக தரைவிரி்ப்புகளை பயன்படுத்தி அதை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்

வழிபாட்டுத்தலத்துக்குள் புனித நீர் தெளிப்பது, வழங்குவது, பிரசாதங்களைக் கைகளால் வழங்குவது அனுமதிக்கப்படாது

வழிபாட்டு தலங்களை பராமரிக்கும் நிர்வாகம் அடிக்கடி அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்குறிப்பாக தரைப்பகுதியை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback