மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம்.. ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் இன்று தெரிவித்துள்ளது.
கொரானா ஊரடங்கால் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலைக்கு தள்ளிவைக்க கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் வழக்கறிஞரின் இந்த உத்தரவாதத்தை பதிவுசெய்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
>
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு