Breaking News

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் வந்த கார்: வெடிக்க வைத்த பாதுகாப்பு படை வீடியோ

அட்மின் மீடியா
0
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த காரை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்து வெடிக்கச் செய்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது


புல்வாமா மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கத்துடன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வருவதாக நேற்று இரவு நம் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலிசார்  சோதனையில் ஈடுபட்ட போது  சோதனைச் சாவடியில் ஒரு கார்  ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் பாதுகாப்பு படையினர் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டான் பின்னர் காரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்

அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வெடிகுணடு நிபுணர்கள் மூலம் அந்த காருடன் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback