Breaking News

தமிழ்நாட்டில் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்த இடங்களில் மாடுகளை வெட்டத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்த இடங்களில் மாடுகளை வெட்டத் தடை என்ற உத்தரவு நீக்கம்!


தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பக்ரீத் அல்லது வேறு எந்த பண்டிகைக்கும் மாடுகள், கன்றுகளை வெட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

அனு​ம​திக்​கப்​பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடு​களை வெட்​டக் கூடாது என்​றும், மாடு​களை வெட்​டும் முன்​பாக அவை முழு​மை​யான மருத்​துவ பரிசோதனைக்கு உட்படுத்​தப்​பட்​டதா என்​றும், கன்​றுக்குட்​டிகள் வெட்​டப்​படு​கின்றனவா என்​றும் சோதிக்க அதிகாரி​களுக்கு உத்​தர​விட வேண்டும்” என கோரியிருந்​தார்.

இந்த வழக்கை சென்னை உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அடங்​கிய அமர்வு கடந்த மே 27-ம் தேதி விசா​ரித்​தது. ஏற்​கெனவே சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2020-ம் ஆண்டு பொது இடங்​களில் மாடு​களை வெட்​டக் கூடாது எனத் தடை விதித்துள்​ளது.  எனவே, தமிழகம் முழு​வதும் பக்​ரீத் பண்​டிகை மட்​டுமல்​லாது மற்ற நாட்​களி​லும் அனுமதிக்கப்பட்ட இடங்​களைத் தவிர்த்​து பொது இடங்​களில் எந்தவொரு விலங்கினங்களை​யும் வெட்​டக்​கூ​டாது. அவ்​வாறு பொது இடங்​களில் மாடு​கள் வெட்டப்பட​வில்லை என்​பதை தமிழக அரசின் தலை​மைச் செயலரும், சட்​டம் ​- ஒழுங்கு கூடு​தல் டி.ஜி.பி-​யும் உறுதி செய்ய உத்​தர​விட்​டனர்

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசின் சார்​பில் வழக்கறிஞர் ஜெய் நரசிம்​மன் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்தார். அதில், மனு​தா​ரர் கோராத கோரிக்​கை​யைத் தமிழ்​நாடு முழுவதும் பொது இடங்​களில் மாடுகளை வெட்​டு​வதற்​கான தடையை சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் பிறப்பித்​துள்​ளது. மனு​தா​ரர் எழுப்​பாத பிரச்சினை​களை​யும் உயர் நீதி​மன்​றம் விவாதித்​துள்​ளது.

எனவே சென்னை உயர்​நீ​தி​மன்றம் பிறப்​பித்த உத்​தர​வுக்​குத் தடை விதிக்க வேண்​டும் என்று கோரப்பட்டது. இந்நிலையில், பொது இடத்தில் மாடுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback