Breaking News

FACT CHECK: அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடலா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்ன வென்றால் இந்தியா முழுவதும் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என ஓர் செய்தியுடன் ஓர் மத்திய அரசு செய்தி போல் ஓர் புகைப்ப்டமும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த இந்தியா முழுவதும் மே-3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கில் உணவகங்கள் மட்டுமேகுறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன.



இந்நிலையில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும்  செய்தி ஓர் வதந்தியாகும்

அந்த அரசு செய்தியும் பொய்யானது யாரோ போட்டோ ஷாப் செய்துள்ளார்கள்

மேலும் இந்தியச் சுற்றுலாத்துறையின் தரப்பில் இருந்து ஹோட்டல்கள்,  உணவகங்கள் மூடப்படுவதாக எந்தவொரு உத்தரவும் வெளியாகவில்லை என்று சுற்றுலா அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 


இந்திய சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மத்திய அரசின் பேக்ட் செக் வெளியிட்ட ட்வீட் பதிவை காணலாம். 







எனவே யாரும் பொயான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback