தட்கல் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1 முதல் புதிய விதி முழு விவரம்
தட்கல் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1 முதல் புதிய விதி முழு விவரம்
முதல் 15 நிமிடம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு - அக்டோபர் 1 முதல் புதிய விதி
ஐஆர்சிடிசி தளத்தில் ஆதார் எண்ணைப் பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
தினமும் அதிகாலை 12.20 மணி முதல் இரவு 11.45 மணிவரை ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல் செய்யப்பட உள்ளது.
இதன்படி ஐஆர்சிடிசி இணையதளம், செயலியில் ஆதார் எண் சரிசார்ப்பு மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஆதார் எண்ணைப் பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இதர பயணிகள் 15 நிமிடங்களுக்குப் பிறகு டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு ரயில்வே அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐஆர்சிடிசி தளத்தில் ஆதாரை பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையம், செயலியில் எனது கணக்கு (My account) தளத்தில் சரிபார்ப்பு (Authenticate user) பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
இதன்பிறகு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உங்களது செல்போன் எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். அந்த பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு நேரில் செல்பவர்கள் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். அவர்களின் மொபைல் போனுக்கு பாஸ்வேர்டு வரும். அதை உள்ளீடு செய்து ரயில் டிக்கெட்டை பெறலாம்.
Tags: தமிழக செய்திகள்