ரமலான் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே
ரமலான் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே
ரமலான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
ரயில் எண் 06037 / 06038 தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரம்
தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (ரயில் எண் 06037) தாம்பரத்தில் மார்ச் 28, 2025 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக (ரயில் எண் 06038) மார்ச் 31, 2025 (திங்கள் கிழமை) அன்று இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தில் வந்தடைந்துவிடும்.
ரயில் எண் 06048 / 06047 தாம்பரம் – திருச்சிராப்பள்ளி – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்
மார்ச் 29 முதல் மார்ச் 31, 2025 வரை, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.40 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.
மார்ச் 29 முதல் மார்ச் 31, 2025 வரை, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில், திருச்சிராப்பள்ளியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மார்ச் 23, 2025 அன்று காலை 8.00 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்