Breaking News

கரூர் அருகே 10 ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12 ம் வகுப்பு மாணவன் நடந்தது என்ன காவல்துறை விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கரூர் அருகே 10 ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12 ம் வகுப்பு மாணவன் நடந்தது என்ன முழு விவரம்

கரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன், படுகாயமடைந்த மாணவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்



கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே 10 வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மாணவியின் கழுத்தை அறுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டன அதற்க்கு காவல்துறை மறுத்துள்ளது

காவல்துறை விளக்கம்:-

சில செய்தி தொலைக்காட்சிகளில் 24.02.2025 ஆம் தேதி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதற்கு மறுப்பு அறிக்கை தெரிவித்தல் தொடர்பாக."

23.02.2025 ஆம் தேதி இரவு கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி இரவு 20.00 மணிக்கு வீட்டில் இருந்த போது மாணவியின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இது குறித்து விசாரணையில் மேற்படி மாணவி அந்த மாணவனைப்பற்றி இழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback