கோவையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து டூவீலர் மீது மோதி தந்தையும் 3 வயது குழந்தையும் பலி உயிர் தப்பிய மனைவி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கோவையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து டூவீலர் மீது மோதி 2 பேர் பலி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார் அசோக்குமார்- சுசீலா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் சர்வந்த் என்ற மகன் இருந்தான்.
கடந்த 9 ம் தேதி அசோக் குமார் தனது மனைவி, மகனுடன் பைக்கில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் அசோக்குமார் மற்றும் அவரது மன் சர்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பஸ்சின் முன்பு அசோக் குமார் தனது மனைவியுன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அவர்களை பின்தொடர்ந்து பஸ் சென்று கொண்டிருக்கிறது.அப்போது பஸ் டிரைவர் ஹாரன் அடிக்கிறார். சாலையின் வலது பக்க தடுப்பு சுவரையொட்டி சென்ற அசோக் குமார் இடதுபுறம் நோக்கி பைக்கை திரும்ப நினைக்கிறார். வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதுகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/vamadevank/status/1757812460747395120
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ