Breaking News

புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான்! முதல் டிவிட் என்ன தெரியுமா

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளுக்கு நேற்று இந்தியாவில் தடைசட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது 



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அந்த கட்சி முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ம்ற்றும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனம் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது இது தொடர்பான காரணங்கள் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் ட்விட்டர் பக்கங்கள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய டுவிட்டர் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். முதன் முதலாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/NTKSeeman4TN/status/1664183647845621760

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback