Breaking News

இரவில் தனியாக செல்லும் பெண்களுக்காக ரோந்து வாகனம் காவல்துறை அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது 


இந்த புதிய திட்டத்தின் மூலம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் 

அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை முற்றிலும் இலவசம்” என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback