CBSE பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் தனியார் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்
2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறன் பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
ஒன்பது முதல் 12 ஆம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி அரசு உத்தரவிட்டு இருந்தது
இந்த ஆண்டு கண்டிப்பாக பொது தேர்வில் அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழ் பாடத்தை எழுத வேண்டும் என்றும் அவர்களுக்கென தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தற்போது தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு 2023 – 2024 சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை கல்வி முறையிலும் பயின்று வரும் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்