Breaking News

தமிழகத்தில் மீண்டும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வழக்கமான நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 

ககன்தீப் சிங் பேடி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்ட்டுள்ளார். 

கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செந்தில் ராஜ், தூத்துக்குடி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதயசந்திரன், கூடுதல் தொல்லியல்துறை ஆணையர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

வினீத், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின்மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback