பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை – தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என நடந்து முடிந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு பேருந்துகளில்3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயனித்து வரும் நிலையில் தற்போது வயது வரம்பு 5ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்