செல்பி எடுக்கும் போது கைதவறி அணையில் விழுந்த செல்போன் 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி வீடியோ
நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.செல்போனை எடுப்பதற்காக கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை அதிகாரி வெளியேற்றினார்.ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்க பகுதியை சுற்றிப் பார்க்கச் நண்பர்களுடன் சென்றுள்ளார். நீர்தேக்கத்தின் அருகில் நின்று ராஜேஷ் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கைதவறி ராஜேஷின் செல்ஃபோன் நீர்தேக்கத்திற்குள் விழுந்தது.
செல்போனை எடுக்க அவர் முயற்சி மேற்கொண்டார். அங்கிருந்தவர்களை அழைத்து தன்னுடைய செல்ஃபேனை மீட்கும்படி கூறியுள்ளார். அவர்களும் முயற்சி செய்தனர். ஆனால், 15 அடி ஆழமுள்ள நீர்தேக்கத்தில் செல்ஃபோன் விழுந்திருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ராஜேஷ் விஸ்வாஸ், இரண்டு கனரக மோட்டார்களை பயன்படுத்தி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளார். செல்ஃபோனை மீட்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் மோட்டார்கள் மூலம் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை ராஜேஷ் வெளியேற்றியுள்ளார்.
செல்போனுக்காக அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியின் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ராஜேஷ் விஸ்வாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அமர்ஜித் பகத் தெரிவித்தார்.இந்நிலையில், அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா ஷுக்லா உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/niayayakkural/status/1662011781814919169
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ