Breaking News

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. வழக்கறிஞர்கள் காணொளி மூலம் ஆஜராக உச்சநீதிமன்றம் அனுமதி

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கறிஞர்களை காணொலி வாயிலாக ஆஜராகலாம் என அறிவித்துள்ளது.



நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை உணர முடிகிறது என்பதால், நீதிமன்ற வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,435 ஆக பதிவாகி உள்ளது

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காணொளி வாயிலாக ஆஜராக விரும்பினால் வழக்கறிஞர்களுக்கு அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தேவைப்படுபவர்கள் நேரில் வரலாம் அல்லது காணொளி வாயிலாக ஆஜராகலாம் என்று கூறியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback