Breaking News

தமிழகம் முழுவதும் இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஏப்ரல் 16 ஞாயிறு அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

தமிழ்நாட்டில் 45 இடங்களில் இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த கால்துறை அனுமதி அளித்துள்ளனர்.

2022ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த  அனுமதி கோரிய நிலையில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக அனுமதி வழங்க கோரி  சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அதில்  44 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்க்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதிவழங்கியது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில்  ஏப்ரல் 11ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது.அதில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தள்ளுபடி உத்தரவு மூலம், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து  16ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாட்டில் 45 இடங்களில் இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த கால்துறை அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை கொரட்டூர், ஊரப்பாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 45 இடங்களில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பு தொடங்க உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியில் ஈடுபட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பேரணியின்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பேரணியை நடத்த வேண்டும்.

ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேரணியில் சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடல்களை பாடவோ, கோஷமிடவோ கூடாது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback