Breaking News

ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்

அட்மின் மீடியா
0

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்துள்ளது பொதுவிநியோக துறை. 

தமிழக அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன்அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் பொதுவிநியோக துறை தெரிவித்துள்ளது. 

இந்த இலவச தொலைபேசி எண் மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் டி.ஜி.பி.யின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது.பொதுமக்கள் அச்சம் இல்லாமல் பொது விநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் இந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback