கல்லூரி வகுப்பறையில் இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதி என அழைத்த பேராசிரியர்.!உங்கள் மகனைஇதுபோல் அழைப்பீர்களா!! மன்னிப்பு கேட்ட பேராசியர்!!உரையாடல் வீடியோ!!! Muslim Student Confronts Professor
கர்நாடகாவின் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியர் ரபிந்திரநாத் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பு நடந்தபோது இஸ்லாமிய மாணவர் ஒருவரை மத பயங்கரவாதி என்று அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் நிதானமாக பொறுமையுடன் அந்த பேராசிரியருக்கு புரியவைத்துள்ளார்
மாணவர் இந்த நகைச்சுவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை! என் மதத்தைப் பற்றி நீங்கள் கேலி செய்ய முடியாது. என மாணவர் அளிக்கும் விளக்கத்தை அதே வகுப்பில் இருந்த மற்றொரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார் அந்த வீடியொ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகின்றது
மேலும் விஷயம் வெளியே தெரிந்தவுடன் பேராசிரியர் ரபிந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவன் - பேராசிரியர் உரையாடல் தமிழ் மொழிபெயர்ப்பு:-
மாணவன்:- இல்லை... இதுபோன்ற நகைச்சுவை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனது மதம் குறித்து மிகவும் கீழ்தனமாக நீங்கள் பேசக்கூடாது.
பேராசிரியர்:- இல்லை இல்லை நீ என் மகன் போன்றவன்
மாணவன்:-
இல்லை. என் தந்தை இவ்வாறு கூறினால் அவர் எனக்கு தந்தையே இல்லை
பேராசிரியர்:-இது நகைச்சுவையான பேச்சு (கசாப் என்று கூறியது)
மாணவன்:- இல்லை, இது நகைச்சுவை அல்ல. 26/11 (மும்பை தாக்குதல்) நகைச்சுவை அல்ல. இந்நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக வாழ்வது, இது போன்ற நிகழ்வுகளை தினமும் சந்திப்பது நகைச்சுவையல்ல.
பேராசிரியர்:- நீ என் மகன் போன்றவன்
மாணவன்:- இல்லை... இல்லை... உங்கள் மகனிடம் இவ்வாறு பேசுவீர்களா? பயங்கரவாதியின் பெயரை கூறி உங்கள் மகனை நீங்கள் அழைப்பீர்களா?
பேராசிரியர்:-இல்லை. என கூறி மீண்டும் மகன் என்று அழைக்க முயன்ற போது,
மாணவன்:- உங்கள் சொந்த மகனை நீங்கள் பயங்கரவாதி என்று அழைப்பீர்களா என்று கேட்டார். நீங்கள் ஒரு பேராசிரியர். எப்படி என்னை நீங்கள் இத்தனை பேர் முன்னிலையில், ஒரு வகுப்பில் அப்படி அழைக்க முடியும், என்று கூறினார்.
பேராசிரியர்:-மன்னித்துவிடு.
மாணவன்:- நீங்கள் பேராசிரியர்... நீங்கள் கற்பிக்க வேண்டும்
பேராசிரியர்:-மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்
மாணவன்:- நீங்கள் என்னை அவ்வாறு அழைத்திருக்கக்கூடாது
பேராசிரியர்:- மன்னித்துவிடு
மாணவன்:- மன்னித்துவிடு என்று நீங்கள் கூறுவதால் எவ்வாறு நீங்கள் சிந்திர்க்கிறீர்கள்... உங்களை இங்கு எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது மாறாது' என்றார்.
பேராசியர் மாணவர் உரையாடல் வீடியோ:-
https://twitter.com/ashoswai/status/1597000265672314880
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ