Breaking News

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று - தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு



உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பான தீா்ப்பை மாவட்ட நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. இதனை முன்னிட்டு வாராணசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிர காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

மசூதிக்குள் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அப்போது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீா் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்ததால் பெரும் சா்ச்சை எழுந்தது.

இந்த வழக்கை எதிா்த்து முஸ்லிம் தரப்பினா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்ததையடுத்து இன்று வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback