தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாகக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சற்று உடல் சோர்வு இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.’ என பதிவிட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை மாதம் 14 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முழுவதும் நேற்று கொரானா புதிய பாதிப்பு : 2283 பேர் தமிழகம் முழுவதும் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: 2707 பேர் ஆகும்
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்