Breaking News

சென்னை மெட்ரோ ரயிலில் முககவசம் கட்டாயம் ..மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு





இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் நாளை (07.07.2022) முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது


சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என அதில் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback