Breaking News

24 மணிநேரமும் கடைகள் இயங்கலாம்- போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை...

அட்மின் மீடியா
0

24மணிநேரமும் கடைகள் இயங்குவது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை...



தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
 
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
 
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன்படி 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வணிக நிறுவனங்கள் 24 x 7 அனைத்து நாள்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
 
இதுகுறித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சில இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன.

எனவே, சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில், குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது என்றும், அதே வேளையில் சட்ட விரோதச் செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Give Us Your Feedback