மேலும் 15 ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி.. முழு விவரம்
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.மேலும் அந்தக் கூட்டத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களிலேயே ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்
இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக அறிவித்த ஓபிஎஸ், இன்றைய தினம் உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமிப்பதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவில் உள்ள ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கைகளுக்கும் , குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் , அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மேற்கொண்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.அவர்கள் பின்வருமாறு,
திரு . கு.ப. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்
திரு . C. ராஜேந்திரன் , Ex . M.L.A. , ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் )
திரு . K.S. சீனிவாசன் , Ex . M.L : A . , ( கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் )
திருமதி ஆர் . ராஜலட்சுமி , Ex . M.L.A. , ( கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக இளைஞர் பாசறை , இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் )
திரு . S.M.K. முகம்மதுஅலி ஜின்னா , ( கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் )
திரு . M. பாரதியார்.( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் )
திரு . P.S. சிவா , ( கழக எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி துணைச் செயலாளர் )
திரு . ஆம்னி பஸ் அண்ணாதுரை , ( கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் )
திரு . M.R. ராஜ்மோகன் , ( திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் )
திரு . C. ராமசந்திரன் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச் செயலாளர் ),
திரு . மணவை J. ஸ்ரீதரன் ராவ் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் )
திருமதி T. சுஜைனி ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல இணைச் செயலாளர் )
திரு . R. விஜய் பாரத்.( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் )
திருமதி V. மோகனப்பிரியா , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் )
திரு . G. மோகன் , ( கழக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவுப் பொருளாளர் )
ஆகியோர் , இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்