Breaking News

குரூப் 2 தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி நாளை (மே 21ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 



தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30 மணிவரையில் நடைபெறும். தேர்வு அறையில் 12.45 மணிவரை தேர்வர்கள் அமர்ந்திருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஹால் டிக்கெட் கலர் அல்லது கருப்பு வெள்ளை நகலை கொண்டு வரலாம், 

தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.* செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்

தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும், 

செப்டம்பர் மாதத்தில் மெயின் நடைபெறவுள்ளது. 

தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். 

வரும் காலத்தில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் மூலம் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்க படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback