Breaking News

பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஜிஹாப் அணியலாமா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரனை

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. 



இதையடுத்து மாணவர்கள் மத அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் வகையிலான உடைகளை அணிந்துவரக் கூடாது என அரசு உத்தரவிட்டது. 

இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவிகள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான மனுவை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback