8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை - முக்கிய அறிவிப்பின் முழு விவரம்..இதோ!
எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அறிவிப்பு:-
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில்,2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 05.03.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும்
இந்த தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து ,தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.01.2022
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-
https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1641906888.pdf
மேலும் விவரங்களுக்கு:-
https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1641974422.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்