தெலங்கானா 6 வயது சிறுமி பலாத்காரக் கொலை: தேடப்பட்டு வந்த நபர் தண்டனைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து பலி!
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராஜு என்பவர் சிறுமியிடம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சைதாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரனை மேற்கொண்டர் அதன்பின் மறுநாள் அந்தச் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்குப் பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார்.
ராஜு மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாக தேடினர்.அதே வேலையில் இந்த ராஜுவின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஹைதராபாத் காவல் துறை அறிவித்திருந்தது
இந்நிலையில் ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் உடல் சிதறிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றி, தேடப்பட்டு வந்த பல்லகொண்ட ராஜுவின் உடலில் இருக்கும் அடையாளங்களையும், உறவினர்களை வைத்தும் அடையாளம் கண்டதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது பல்லகொண்ட ராஜுவின் உடல் எனத் தெரியவந்தது.
இது தொடர்பாக தெலங்கானா காவல் டிஜிபி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,
தயவுசெய்து கவனிக்கவும்.
ஹைதராபாத் சிங்கனேரி காலனியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலைக் கைப்பற்றி உடலின் அடையாளங்களை வைத்துச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது' எனத் பதிவிட்டுள்ளார்
#SaidabadIncident accused P Raju's deadbody found on railway track @hydcitypolice pic.twitter.com/Dkrd93KYh8
— S.M. Bilal (@Bilaljourno) September 16, 2021
#AttentionPlease : The accused of "Child Sexual Molestation and murder @ Singareni Colony, found dead on the railway track, in the limits of #StationGhanpurPoliceStation.
— DGP TELANGANA POLICE (@TelanganaDGP) September 16, 2021
Declared after the verification of identification marks on deceased body. pic.twitter.com/qCPLG9dCCE
Tags: இந்திய செய்திகள்