டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி..! வீடியோ
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தபோது வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த அவரது போட்டி ரவுடி கும்பல் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது.ரவுடிகள் கோகி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும் சுட்டனர். இதில் தாதா கோகி உயிரிழந்தார்
இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/hemantrajora_/status/1441324003092693003
Rohini Court Encounter. Four killed in shootout at Delhi's Rohini court. Gangster Jeetendra Gogi and three others killed. #RohiniCourt #jitendragogi pic.twitter.com/ua2Fb9FIuJ
— Hemwati Nandan Rajaura (@hemantrajora_) September 24, 2021