பீஸ் கட்டல என்பதற்காக டி.சி. வழங்க மறுக்கக் கூடாது : தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை" : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
கொரானா காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது மேலும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீதம் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரானா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளியில் கட்டணம் செலுத்தமுடியாமல் இருக்கின்றார்கள் , மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் காரணமாக 8 ம் வகுப்பு வரை பள்ளியில் மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் மாற்ரு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது
இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சார்பாக வழக்கு தொடர பட்டு இருந்தது
இன்று இந்த வழக்கை மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள் மாற்று சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்