வசதி இருக்கின்றது என 4 5 கார்கள் வாங்ககூடாது : மும்பை உயர்நீதிமன்றம்
மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்கள், கார் நிறுத்தும் இடத்தை குறைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையை சேர்ந்த சந்தீப் தாக்குர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி அளிக்கப்படாமல் இருந்தால் அடுக்குமாடி குடியிறிப்பில் வசிப்பவர்கள் குடியிருப்புக்கு வெளியே சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவே மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் குறிப்பிட்டு இருந்தார்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து சாலைகளிலுமே கார்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளன. 30 சதவீத சாலைகள் தெருவோர பார்க்கிங் கார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சாதாரணமாகிவிட்டது. இவற்றைக் கட்டுப்படுத்த பார்க்கிங் ஒழுங்குமுறைக் கொள்கை வகுப்பது அவசியம். வாகன நிறுத்த வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு குடும்பத்தினர் 4 - 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. வாகன நிறுத்துமிடம் குறித்து முறையான கொள்கை வகுக்கப்படவில்லை எனில், எதிர்காலத்தில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags: இந்திய செய்திகள்