இனி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடலாம் ! தமிழக அரசின் அசத்தல் திட்டம் !!
அட்மின் மீடியா
0
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் முதன்முறையாக நாளை முதல் சென்னையில் இருக்கும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து, 37 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்