பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம்..!புகார் அளிக்க ...
அட்மின் மீடியா
0
பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com என்கின்ற மெயில் ஜடியில் உங்களை புகாரைஅனுப்பலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி மதன் கூகுள் பே மூலம் பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் அளிப்பவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்