Breaking News

திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல்

அட்மின் மீடியா
0

 பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்கான கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback