சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது உயர்நீதிமன்றம்
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் லோகரங்கன் என்பவர் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும் அப்படி புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதனை அடுத்து நீதிபதிகள் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்