Breaking News

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில்

 


 

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 

ராமநாதபுரம், 

கடலூர் 

மாவட்டங்களில் ஒரு இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

தஞ்சாவூர், 

திருவாரூர், 

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை, 

புதுக்கோட்டை, 

சிவகங்கை, 

திருநெல்வேலி, 

திண்டுக்கல், 

தூத்துக்குடி, 

கன்னியாகுமரி 

ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.1.2021 அன்று

ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.1.2021அன்று

புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 

ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் 

என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf 

 

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback