Breaking News

FACT CHECK: மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர் எங்கு நடந்தது ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோ முதலில் சமூக வலைதளமான வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் முதலில் பரவி அடுத்து சில ஊடகங்களிலும் வெளியானது மேலும் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் எனவும் செய்தி வெளியானது

ஆனால் உண்மையில் அந்த வீடியோ கடந்த 01.06.2020 அன்று தெலுங்கானாவில் நிசாம்பூரில் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர் வீடியோவை தற்போது நிவர் புயலோடு தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பலரும் ஷேர் செய்தார்கள் 

அந்த பொய்யான தகவலை உண்மை என்று நம்பி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback