தொலைகாட்சியில் ஆபாசத்தைப் பரப்பும் விளம்பரங்களை ஒளிபரப்ப உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள்,சோப்புகள், வாசனை திரவியங்கள் தொடர்பான விளம்பரங்களுக்குஉயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது
ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில்; தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகின்றன.
அதில் கருத்தடை சாதனங்கள் பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள், மருந்துகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாகவும், வளரும் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாகவும் அமைகின்றன. இவை போன்ற விளம்பரங்களை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று விதிகள் இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை.
ஆகவே திரைப்படங்களை போலவே விளம்பரங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தவும், கண்காணிக்கவும், மேலும் அதனை மீறும் ஊடகங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். என அம்மனுவில் கூறியிருந்தார்
இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த புகழேந்தி, கிருபாகரன் அமர்வு ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள்,சோப்புகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒலிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்