நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் அடுத்தாண்டு ஜனவரி முதல் ‘பாஸ்ட்டேக்’ கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ‘பாஸ்ட் டேக்’ எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது.
பாஸ்டேக் மூலம் வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், தானியங்கி மூலம் பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.