Breaking News

SPB தொடர்ந்து கவலைக்கிடம்!மருத்துவமனை அறிக்கை

அட்மின் மீடியா
0

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள்  கொரானா தொற்று காரணமாக ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 


சில நாட்களுக்கு முன் எஸ்பிபியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவ நிர்வாகம் கூறிவந்தார்கள்

இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்

தற்பொழுது எஸ்பிபி சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனைக்கு அவரது மனைவி, மகன், மகள் பாரதிராஜா, இளையராஜா நடிகர் பார்த்திபன் மற்றும் பலர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்


 

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு  திடீரென உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback