Breaking News

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா?

அட்மின் மீடியா
0

நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசாக தருகிறேன் என நான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு குறித்து, நடிகர் சூர்யா, சமீபத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார் அதில் நீட் தேர்வை மனுநீதி தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாகவும், என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுகு வழங்க தயார் என அர்ஜுன் சம்பத்துக்கு நடிகர் சூர்யா பதிலளிப்பது போலவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது

 


இந்த தகவலுக்கு அர்ஜூன் சம்பத் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பொய்யான செய்தியை நம்ப வைத்து சூர்யாவரை கொண்டு சென்று பதிலுரைக்கவைத்து இன்னும் அதனை வலைத்தளங்களில் விவாதிக்க வைப்பதுமாணவ தற்கொலைகளை திமுக ஊக்குவிக்கிறது என்ற மக்கள் கருத்தினை திசை திருப்புவதற்கு தான்R S பாரதி ஊடகங்கள் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்க மறந்து விடுகின்றது என பதிவிட்டு மறுப்பு தெரிவித்துள்ளார்

 

மேலும் அதே போல் இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்திலும் நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக என் படம் போட்டு பொய் பிரச்சாரம் நடக்கிறது   எனக் குறிப்பிட்டிருந்தார்.

 மேலும் நடிகர் சூர்யா அவர்கள் அறிவித்தார் என பரவும் செய்திக்கும் எந்த ஆதாரமும் இதுவரை இல்லை 

 

 

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback