Breaking News

FACT CHECK: மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரானாவினால் இறந்துவிட்டாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் இறந்துவிட்டார் என   ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜிக் கடை நடத்தி வந்த உரிமையாள்ர் பெயர் சந்திரசேகர் ஆவார் அவரது  சகோதரர் பெயர்  சிவராமகிருஷ்ணன் மேலும்அவர்  டிஎம்எஸ் மத்திய கணக்காயர் அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.  சில சமயம்  தன்னுடைய சகோதரருக்கு உதவி செய்ய கடைக்கு வருவது வழக்கம்.அதன் அடிப்படையில் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback