Breaking News

இனி கடைகள் இரவு 7 மணி வரை இயங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதில் முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback