Breaking News

தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கலாமா? வழங்க கூடாதா? நாளை தீர்ப்பு

அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


இதனால் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் , தன்னார்வலர்களும் உதவி செய்து வந்தார்கள் இதனால் ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள்

கொரானா பரவலை தடுக்க தன்னார்வலர்கள்  நிவாரண உதவிகள் வழங்குவதற்கு அரசு தடை விதித்தது இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு பிறகு நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback