Breaking News

உங்களுக்கு பெண்குழந்தை இருந்தால் நீங்களும் 50,000 பெறலாம் ?முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்


 
இதற்­கான விண்­ணப்­பம் ஒவ்­வொரு மாவட்ட சமூக நல அலு­வ­ல­கத்­தில் கிடைக்­கி­றது. அல்லது

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:

https://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf#innerlink

என்ற இணைய தள முக­வ­ரிக்கு சென்று டவுன்­லோட் செய்து கொள்­ள­லாம். 

டவுன்­லோட் செய்­யும் போது அர­சின் பெண்­க­ளுக்­கான திட்­டங்­கள் அனைத்­துக்­கான விண்­ணப்­பங்­கள் டவுன்­லோட் ஆகும். அதில் சிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்தை பாது­காப்­புத் திட்­டத்­துக்­கான விண்­ணப்­பம் மட்­டும் எடுத்­துக் கொள்­ளவும் பின்­னர் விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்­றி­தழ்­களை இணைத்து மாவட்ட சமூக அலு­வ­ல­ரி­டம் கொடுக்க வேண்­டும்.

முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 1
 
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றால் முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்த பெண் குழந்தை எதிர்காலத்துக்காக ரூ. 50,000/- டெபாசிட் செய்யப்படும்.
 
முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 2
 
ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி தனியாக ரூ. 25,000/- விதத்தில் டெபாசிட் அரசால் செய்யப்படும்  ஆனால் ஆண் குழந்தை இருக்­கக்­கூ­டாது. 
 
குறிப்பு:
 
சிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்­புத் திட்­டத்­துக்கு 1.8.2011க்கு பிறகு பிறந்த பெண் குழந்­தை­கள் மட்­டுமே விண்­ணப்­பிக்க முடி­யும். 
 
பெற்­றோ­ரில் ஒரு­வர் 35 வய­துக்­குள் கருத்­தடை அறுவை சிகிச்சை செய்­தி­ருக்க வேண்­டும்.  
 
உங்­க­ளுக்கு ஒரே­யொரு பெண் குழந்தை இருந்­தால், அந்த குழந்­தை­யின் பெய­ரில் 50 ஆயி­ரம் ரூபாய் முத­லீடு செய்­யப்­ப­டும். அதுவே இரு பெண் குழந்­தை­க­ளாக இருந்­தால் ஒவ்­வொரு குழந்­தை­யின் பெய­ரி­லும் தலா 25 ஆயி­ரம் ரூபாய் முத­லீடு செய்­வார்­கள்.  பெண் குழந்தை பிறந்த மூன்றுஆண்­டுக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும்.


உங்­கள் குழந்­தை­க­ளில் யார் பெய­ருக்கு விண்­ணப்­பித்­தீர்­களோ, அக்­கு­ழந்­தைக்­கான தொகை அந்த குழந்தை 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்­த­வு­டன் அரசு முதிர்வு தொகை­யாக வழங்­கும்.

இணைக்க வேண்­டிய சான்­று­கள்:
 
* குழந்­தை­யின் பிறப்பு சான்­றி­தழ்

* சாதி, வரு­மா­ன இருப்பிட சான்று

* கருத்­தடை அறுவை சிகிச்சை செய்து கொண்­ட­தற்­கான சான்று

* ஆண் வாரிசு இல்லை என்­ப­தற்­கான வட்­டாட்­சி­யர் வழங்­கும் உறு­திச்­சான்று

* குடும்ப அட்­டை­யின் நகல்

* குடும்ப புகைப்­ப­டம்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback