Breaking News

பெரியகுளம் ஷாஹீன்பாக் 10வது நாளாக தொடரும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



தமிழகத்தில் தேனி  மாவட்டம் பெரியகுளம், வத்தலகுண்டு பகுதியில் உள்ல ரகமத் நகர் பள்ளி வாசல் அருகில் கடந்த 11 ம் தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று  10 வது நாளாக தொடர்கின்றது

இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டு வருகின்றனர். .

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback