பிரதமர் , ஜனாதிபதி போட்டோவா.. உஷார்.. 5 லட்சம் அபராதம், 6 மாதம் ஜெயில்
அட்மின் மீடியா
0
வியாபார நோக்கத்திற்காக, பிரதமர் அல்லது ஜனாதிபதியின் புகைப்படத்தை முறையற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தினால் அபராதம்
சில தனியார் நிறுவனங்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தின. இதற்காக அந்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டு இருந்தன.
இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை தவறாக அனுமதியின்றி பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம் புதிய சட்டத்தின் கீழ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் முறை ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே தவறை செய்தால், ரூ .5 லட்சம் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருகிறது.
Tags: முக்கிய செய்தி