Breaking News

17 ம்தேதி முதல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

அட்மின் மீடியா
0
மேற்கு வங்காளத்தில் நடந்துவரும் டாக்டர்கள் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும்  டாக்டர்கள் ஆதரவளித்து வருவதால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.




மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கு அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அப்போராடத்திற்க்கு ஆதரவு அளித்தும் டாக்டர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், ஜூனியர், சீனியர் டாக்டர்கள் என்று அனைத்து தரப்பினரும்  நாடு முழுவதும் டாக்டர்கள் வரும் 17 ம்தேதி வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளார்கள்

மேலும் ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் பணியாற்றுமாறும் பணித்துள்ளது. எனினும், ஸ்டிரைக் மற்றும் போராட்ட நேரங்களில் அவசரசிகிச்சை பிரிவு டாக்டர்கள் பணியை மேற்கொள்வார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கை கூறுகிறது 

Give Us Your Feedback